தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள்
A Tamil Translation of Social Media in South India
Shriram Venkatraman (Author)
Series: Why We Post
தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள், தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களின் பயன்பாடு பற்றிய புரிதலை தீவிர மாற்றமடைந்து வரும் ஒரு பிராந்தியத்தில் நடத்தப்பட்ட முதல் மக்கள் இன அமைப்பியல் ஆய்வின் மூலம் நமக்களித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஐடி நிறுவனங்களின் வருகை, முன்பு விவசாய பகுதியாக இருந்த ஒரு இடத்தை வளர்ந்து கொண்டேயிருக்கும் அறிவார்ந்த பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய கிராம வாழ்வு ஆகியவற்றின் பக்க அணிமை நிலையாக ஆக்கியிருக்கிறது. இந்த பக்க அணிமை நிலையால் ஒருசில வர்க்க பேதங்கள் காணப்பட்டபோதும், இந்த பிராந்தியத்தில் நடத்தப்பட்ட சமூக ஊடக ஆய்வு, ஒற்றுமைகளும் இருந்திருப்பதற்கான சான்றளிக்கிறது. குறிப்பாக பழைய மற்றும் புதிய குடியிருப்பாளர்களிடையே பணி மற்றும் வாழ்வின் இடையேயான தேய்ந்து வரும் எல்லைகளில் இது காணப்படுகிறது.
வெங்கட்ராமன், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் சமூக ஊடகங்களின் பாதிப்புகளை ஆராய்ந்து, இனம், வர்க்கம், வயது பாலினம் ஆகியவற்றின் தாக்கத்தையும் அலசி, எந்த வகையான சமூக ஊடகத்தளங்கள் எந்தெந்த சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்திருக்கிறார். இந்த காரணிகள், சமூக ஊடக பயன்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவர், தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள், சமுதாய மாற்றத்தை தூண்டியிருப்பது போல தோன்றினாலும், அவை உண்மையில், உள்ளூர் பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளால் கட்டுண்டு இருக்கின்றன என்றும் குறிப்பிடுகிறார்.
Related titles
உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது
Elisabetta Costa, Nell Haynes, Tom McDonald, Razvan Nicolescu, Jolynna Sinanan, Juliano Spyer, Shriram Venkatraman, Xinyuan Wang,
28 February 2019
How the World Changed Social Media
Daniel Miller, Elisabetta Costa, Nell Haynes, Tom McDonald, Razvan Nicolescu, Jolynna Sinanan, Juliano Spyer, Shriram Venkatraman, Xinyuan Wang,
29 February 2016
தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள்
A Tamil Translation of Social Media in South India
தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள், தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களின் பயன்பாடு பற்றிய புரிதலை தீவிர மாற்றமடைந்து வரும் ஒரு பிராந்தியத்தில் நடத்தப்பட்ட முதல் மக்கள் இன அமைப்பியல் ஆய்வின் மூலம் நமக்களித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஐடி நிறுவனங்களின் வருகை, முன்பு விவசாய பகுதியாக இருந்த ஒரு இடத்தை வளர்ந்து கொண்டேயிருக்கும் அறிவார்ந்த பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய கிராம வாழ்வு ஆகியவற்றின் பக்க அணிமை நிலையாக ஆக்கியிருக்கிறது. இந்த பக்க அணிமை நிலையால் ஒருசில வர்க்க பேதங்கள் காணப்பட்டபோதும், இந்த பிராந்தியத்தில் நடத்தப்பட்ட சமூக ஊடக ஆய்வு, ஒற்றுமைகளும் இருந்திருப்பதற்கான சான்றளிக்கிறது. குறிப்பாக பழைய மற்றும் புதிய குடியிருப்பாளர்களிடையே பணி மற்றும் வாழ்வின் இடையேயான தேய்ந்து வரும் எல்லைகளில் இது காணப்படுகிறது.
வெங்கட்ராமன், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் சமூக ஊடகங்களின் பாதிப்புகளை ஆராய்ந்து, இனம், வர்க்கம், வயது பாலினம் ஆகியவற்றின் தாக்கத்தையும் அலசி, எந்த வகையான சமூக ஊடகத்தளங்கள் எந்தெந்த சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்திருக்கிறார். இந்த காரணிகள், சமூக ஊடக பயன்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவர், தென்னிந்தியாவில் சமூக ஊடகங்கள், சமுதாய மாற்றத்தை தூண்டியிருப்பது போல தோன்றினாலும், அவை உண்மையில், உள்ளூர் பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளால் கட்டுண்டு இருக்கின்றன என்றும் குறிப்பிடுகிறார்.